*அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்:-*
1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*திருக்குறள்*
2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*சீவக சிந்தாமணி*
3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*கம்பராமாயாணம்*
4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
*பெரிய புராணம்*
5..இயற்கை இன்பகலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*கலித்தொகை*
6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*புறநானூறு*
7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
*குறிஞ்சிப்பாட்டு*
8..அகவற்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*பெருங்கதை*
9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
*நேமிநாதம்*
10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*பத்துப்பாட்டு*
11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
*திருவாசகம்*
12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
*பதிற்றுப்பத்து*
13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
*தேவாரப்பதிகங்கள்*
14.. இரட்டைகாப்பியங்கள் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *சிலப்பதிகாரம், மணிமேகலை*
15..அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
*முதுமொழிக்காஞ்சி*
16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*மணிமேகலை*
17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
*குண்டலகேசி*
18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
*நாலடியார்*
19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
திருக்கருவை *பதிற்றுப்பத்தந்தாதி*
20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*இலக்கண விளக்கம்*
21. குழந்தை இலக்கியம் என்று போற்றப்படும் நூல் எது?
*பிள்ளைத் தமிழ்*
22. தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாராட்டப்பெறும் நூல் எது?
*திருக்குறள்*
23. புறப்பாட்டு அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
*புறநானூறு*
24. ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல்
காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம் போன்ற
அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *சிலப்பதிகாரம்*
25. மணநூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - *சீவகசிந்தாமணி*
26. இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம் போன்ற
அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *கம்பராமாயணம்*
27. திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம் போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - *பெரியபுராணம்*
28. குட்டித் தொல்காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *தொன்னூல் விளக்கம்*
29. வஞ்சி நெடும்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *பட்டினப்பாலை*
30. கற்றறிந்தோர் ஏத்தும் தொகை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -
*கலித்தொகை*
31. புறம், புறப்பாட்டு தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - *புறநானூறு*
32. பாணாறு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *பெரும்பாணாற்றுப்படை*
33. கூத்தராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *மலைபடுகடாம்*
34. பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -
*முல்லைப்பாட்டு*
35. காப்பியப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *குறிஞ்சிப் பாட்டு*
36. உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி,
தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம் போன்ற
அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *திருக்குறள்*
37..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
*சுந்தரரின் பதிகங்கள்*
38. அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், மணிமேகலை துறவு, பௌத்த காப்பியம்
போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *மணிமேகலை*
39. புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - *திருமுருகாற்றுப்படை*
40. வேளாண்வேதம், நாலடி நானூறு, குட்டித் திருக்குறள் போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - *நாலடியார்*
41. தமிழ் மறை வேதம், திருவாய் மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும்
நூல் - *நறுந்தொகை*
42. முதுமொழி, உலக வசனம், பழமொழி போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - பழமொழி நானூறு
43. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும்
நூல் - *குற்றாலக் குறவஞ்சி*
44. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை போன்ற அடைமொழியால்
குறிக்கப்படும் நூல் - *பெருங்கதை*
45. தமிழர் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *திருமந்திரம்*
46. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *திருவாசகம்*
47. தமிழ் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *நாலாயிர திவ்ய பிரபந்தம்*