அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

 *அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்:-*


1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*திருக்குறள்*


2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*சீவக சிந்தாமணி*


3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*கம்பராமாயாணம்*


4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

*பெரிய புராணம்*


5..இயற்கை இன்பகலம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*கலித்தொகை*


6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*புறநானூறு*


7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?

*குறிஞ்சிப்பாட்டு*


8..அகவற்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*பெருங்கதை*


9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

*நேமிநாதம்*


10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*பத்துப்பாட்டு*


11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?

*திருவாசகம்*


12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?

*பதிற்றுப்பத்து*


13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

*தேவாரப்பதிகங்கள்*


14.. இரட்டைகாப்பியங்கள் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *சிலப்பதிகாரம்,  மணிமேகலை*


15..அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?

*முதுமொழிக்காஞ்சி*


16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*மணிமேகலை*


17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?

*குண்டலகேசி*


18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??

*நாலடியார்*


19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?

திருக்கருவை *பதிற்றுப்பத்தந்தாதி*


20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

*இலக்கண விளக்கம்*


21. குழந்தை இலக்கியம் என்று போற்றப்படும் நூல் எது? 

*பிள்ளைத் தமிழ்*


22. தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாராட்டப்பெறும் நூல் எது?

*திருக்குறள்*


23. புறப்பாட்டு அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?

*புறநானூறு*


24. ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல்

காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம் போன்ற

அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *சிலப்பதிகாரம்*


25. மணநூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் - *சீவகசிந்தாமணி*


26. இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம் போன்ற

அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *கம்பராமாயணம்*


27. திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம் போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் - *பெரியபுராணம்*


28. குட்டித் தொல்காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *தொன்னூல் விளக்கம்*


29. வஞ்சி நெடும்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *பட்டினப்பாலை*


30. கற்றறிந்தோர் ஏத்தும் தொகை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -

*கலித்தொகை*


31. புறம், புறப்பாட்டு தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் - *புறநானூறு*


32. பாணாறு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *பெரும்பாணாற்றுப்படை*


33. கூத்தராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *மலைபடுகடாம்*


34. பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -

*முல்லைப்பாட்டு*


35. காப்பியப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *குறிஞ்சிப் பாட்டு*


36. உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி,

தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம் போன்ற

அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *திருக்குறள்*


37..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?

*சுந்தரரின் பதிகங்கள்*


38. அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், மணிமேகலை துறவு, பௌத்த காப்பியம்

போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *மணிமேகலை*


39. புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் - *திருமுருகாற்றுப்படை*


40. வேளாண்வேதம், நாலடி நானூறு, குட்டித் திருக்குறள் போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் - *நாலடியார்*


41. தமிழ் மறை வேதம், திருவாய் மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும்

நூல் - *நறுந்தொகை*


42. முதுமொழி, உலக வசனம், பழமொழி போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் -  பழமொழி நானூறு 


43. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும்

நூல் - *குற்றாலக் குறவஞ்சி*


44. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை போன்ற அடைமொழியால்

குறிக்கப்படும் நூல் -  *பெருங்கதை*


45. தமிழர் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  *திருமந்திரம்*


46. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி

போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  *திருவாசகம்*


47. தமிழ் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - *நாலாயிர திவ்ய பிரபந்தம்*

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post