போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 14-10-2023

 போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 14-10-2023


 தேசியம்:-


Card image cap
  • தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்டோபர் 14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்
  • நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும்.
  • இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும்இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும்.
  • இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

தமிழ் நாடு:-


Card image cap
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (Sports Development Authority of Tamil Nadu) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர் -வீராங்கனைகளுக்கு ரூ. 9.40 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
  • இதில் உரையாற்றிய முதலமைச்சர்சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
  • மேலும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னைமதுரைதிருச்சிநீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்றார்.

முக்கிய குறிப்புகள்

  • ஆசிய போட்டிகளில் இந்தியா மொத்தமாக வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை -  107 (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்)
  • தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை- 28
  • இந்திய அளவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாட்டின் நிலை– வது இடம்
  • 2023-ஆம் ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியை நடத்தும் மாநிலம் - தமிழ்நாடு

Card image cap
  • சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட வழித்தடம் 5-இல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • கொளத்தூர் சந்திப்புசீனிவாச நகர்வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
  • சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில்சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

விளையாட்டு செய்திகள்:-


Card image cap
  • சென்னை மாநகராட்சிசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்ரேசிங் புரோமோஷன்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில்சென்னையில் Chennai Formula Racing Circuit போட்டி நடத்தப்படவுள்ளது.
  • இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படும் மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும்.
  • Chennai Formula Racing Circuit – F4 போட்டியில்இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னை மாநகரில் தீவுத்திடல் மைதானத்திலிருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகின்றன.
  • இப்போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

முக்கிய நாட்கள்:-


Card image cap
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்றுஉலகம் முழுவதும் தர நிர்ணய தினம்(World Standards day) கொண்டாடப்படுகிறது
  • இது தர நிர்ணய பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும் எதிர்கால பாதையில் பயணிப்பதற்கும் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டின் உலக தர நிர்ணய தினத்தின் கருப்பொருள் "நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான நிலையான வளர்ச்சி இலக்கை உள்ளடக்கிய சிறந்த உலகிற்கான பகிரப்பட்ட பார்வை" என்பதாகும்.

Card image cap
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று  மின்னணுக் கழிவு தினம்(INTERNATIONAL E-WASTE DAY) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
  • இத்தினம் மறுபயன்பாடுமீள்வு மற்றும் மறுசுழற்சி வீதங்களை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் உலகெங்கிலுமுள்ள மின்னணுக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவதை ஊக்குவிப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது
  • இத்தினம் 2018 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

இராணுவம்:-


Card image cap
  • ஆபரேஷன் அஜய்(2023)- போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்
  • ஆபரேஷன் தோஸ்த்(2023) - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிசிரியா நாடுகளுக்கு நிவாரண உதவி அளித்த திட்டம்
  • ஆபரேஷன் காவிரி(2022) - வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கி தவித்த இந்தியர்கள், INS சுமேதா கப்பல் மூலம் மீட்கப்பட்ட திட்டம்
  • ஆபரேஷன் கங்கா(2022)- போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்ட திட்டம்
  • ஆபரேஷன் தேவி சக்தி(2021) - தலிபான் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்ட திட்டம் 
  • ஆபரேஷன் வந்தே பாரத்(2020)- கரோனா வைரஸ் தடுப்பு லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை திரும்ப அழைத்து வந்த திட்டம்
  • ஆபரேஷன்  சமுத்திர சேது(2020) - கரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை கடல்மார்க்கமாக அழைத்து வர செயல்படுத்தப்பட்ட திட்டம்
  • சங்கத் மோச்சான்(2016)- போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்ட திட்டம்
  • ஆபரேஷன் ராஹத்(2015) - உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் வசித்து வந்த இந்தியர்களை INS சுமித்ரா என்ற கப்பல் மூலம் மீட்ட திட்டம்
  • ஆபரேஷன் மைத்ரி(2015) - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post