போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 17-10-2023
தேசியம் :-

- இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.
- இதைத்தொடர்ந்து ISRO விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பெங்களூரு சென்ற பிரதமர் மோடி, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்டு 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
- இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
- சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தினம் - ஜூலை 14,2023
- விண்கலம் ஏவப்பட்ட ராக்கெட்டின் பெயர் - Geosynchronous Satellite Launch Vehicle Mark III எனப்படும் LVM 3
- விண்கலத்தின் எடை - 3,895 கிலோ
- லேண்டரின் பெயர் - விக்ரம்
- ரோவரின் பெயர் - பிரக்யான்
- சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த செலவு - ரூ.615 கோடி
- திட்ட இயக்குனர் - வீர முத்துவேல்
- சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய தினம் – ஆகஸ்ட் 23, 2023(தேசிய விண்வெளி தினம்)
- சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் - 14 நாட்கள்
- நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சூட்டப்பட்ட பெயர் - சிவசக்தி புள்ளி
- நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா

- நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடிய 'கார்போ' என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது.
- இந்த பாடலுக்கான வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.
- இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
விருதுகள்:-

- லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் உள்ளிட்ட 16 வகையான பிரிவுகளில் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது.
- இதில், முதுகெலும்பில்லா உயிரினங்களை படம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீராம் முரளிக்கு, முதுகெலும்பில்லா உயிரினம் பிரிவில் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது வழங்கி லண்டன் அருங்காட்சியகம் கவுரவித்தது.

- ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது கோவாவின் 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
- மைக்கேல் டக்ளஸ் தனது ஹாலிவுட் வாழ்க்கையை 1966-இல் தொடங்கி, 63-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- 1987ஆம் ஆண்டு வெளியான ‘வால் ஸ்ட்ரீட்’ என்னும் படத்திற்காக 'சிறந்த நடிகருக்கான' ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

- உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- மணிப்பூர் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- மார்ச் 25, 2013
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 217(1)
- உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது - 62
- இந்தியாவில் உள்ள மொத்த உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை- 25
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி- நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்
விளையாட்டு செய்திகள்:-

- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141-வது அமர்வு மும்பையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
- இந்த அமர்வில் நேற்று(அக்டோபர் 16), 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 5 புதிய விளையாட்டுகளை சேர்ப்பதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.
புதிதாக சேர்க்கப்பட்ட 5 விளையாட்டுகள்
- Cricket-T20
- Baseball/softball
- Flag football
- Squash
- Lacrosse
ஒலிம்பிக் - முக்கிய குறிப்புகள்
- முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டு கி.மு. 776 இல் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நடத்தப்பட்டது
- ஒலிம்பிக் போட்டி நவீன வடிவம் பெற்ற ஆண்டு - ஜூன் 23,1894
- நவீன ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைத்தவர்- பியரிடி கூபர்டின்(ஒலிம்பிக் போட்டியின் தந்தை).
- முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் - பியரிடி கூபர்டின்
- முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு - 1896(ஏதென்ஸ்)
- ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட ஆண்டு - 1900(பாரிஸ்)
- குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1924
- ஒலிம்பிக் கொடி முதல் முதலாக பறக்கவிடப்பட்ட ஆண்டு – 1920
- ஒலிம்பிக் கொடியில் மொத்தமுள்ள வண்ணங்கள் - 6
- வெள்ளை நிறத்தைப் பின்புலமாக கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்
- இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன.
- இதுவரை 32 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது.
அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்கள்
- 2024 – பாரீஸ்(பிரான்ஸ்)
- 2028- லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா)
- 2032- பிரிஸ்பேன்(ஆஸ்திரேலியா)
இறப்பு:-

- இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ் கில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.
- மனோகர் சிங் கில், கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்தவர்.
- 2001-இல் அவரது பணி ஓய்வுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார்.
- 2008-இல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
முக்கிய நாட்கள்:-

- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- வறுமை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும், இந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தின் கருப்பொருள்: "கண்ணியமான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு: அனைவருக்கும் கண்ணியத்தை நடைமுறைப்படுத்துதல்"
- டிசம்பர் 22, 1992- இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஐநா பொதுச் சபை அக்டோபர் 17 ஆம் தேதியை சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தது.
உலக வங்கியின் தரவுகளின் படி உலகில் அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்
- தெற்கு சூடான் - 82.30%
- ஈக்குவடோரியல் கினியா - 76.80%
- மடகாஸ்கர் - 70.70%
- கினியா பிசாவ் - 69.30%
- எரிட்ரியா - 69.00%
- சாவோ டோம் மற்றும் பிரின்சிபி - 66.70%
- புருண்டி - 64.90%
- காங்கோ ஜனநாயக குடியரசு - 63.90%
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு - 62.00%
- குவேட்டமாலா - 59.30%
Tags:
Current Affairs