கனமழை காரணமாக 7 மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
1.சென்னை
2.திருவள்ளூர்
3.ராணிப்பேட்டை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1.காஞ்சிபுரம்
2.செங்கல்பட்டு
3.விழுப்புரம்
4.வேலூர்
🌨️ கன மழை பெய்துள்ளதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர் .
