இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 19/05/2023
தேசியம் :-

- பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டமான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்த புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்
- புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
- மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன.
- 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன.
- 'அரசியலமைப்பு அரங்கு' எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
- நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் HCP டிசைன் வழங்கியது.
- ஆங்கிலேயர் ஆட்சியில் Council House என்று அழைக்கப்பட்ட தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் ஜனவரி 18,1927-இல் திறக்கப்பட்டது.(சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது)

- ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ஹவுரா-புரி இடையிலான `வந்தே பாரத்' ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார்.
- ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக ஹவுரா-புரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

- மவுலவி அப்துல் கபீரை ஆப்கானிஸ்தானின் பிரதமராக தலிபான்கள் நியமித்திருக்கிறார்கள்.
- 2020-ஆம் ஆண்டு தோஹா ஒப்பந்ததத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலிபான்கள் குழுவில் முக்கியமாக பங்காற்றியவர் அப்துல் கபீர்.

- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஆர்.பழனிகுமாரை மீண்டும் அதே பதவியில் நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவரின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு மார்ச் 9-அம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: ஜுலை 15,1994.
- மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பவர் – ஆளுநர்
- இந்திய அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தச் சட்டங்கள், 1992-இன் கீழ் நிறுவப்பட்ட சுதந்திரமான, தன்னாட்சியுடைய ஒரு சட்டபூர்வ அமைப்பு.
- இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 243-K மற்றும் சட்டக்கூறு 243-ZA -இன் கீழான அரசியலமைப்பு சார்ந்த அதிகார அமைப்பே மாநில தேர்தல் ஆணையமாகும். மேலும், இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 239 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.
- ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அனைத்துத் தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே நடத்தப்படும்.
- உள்ளாட்சி மொத்த பதவியிடங்களில் பெண்களுக்கன இடஒதுக்கீடு- 50 சதவீதம்
- உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு வாக்காளர் அளிக்கும் அதிகபட்ச வாக்குகள் - ஊரக உள்ளாட்சிகளில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு வாக்கும் பதிவு செய்யலாம்.
- உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது – 21
- மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1950.
- மதராஸ் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1958
- மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1958.
- இந்தியாவின் முதல் மாநகராட்சி - மெட்ராஸ் (செப்டம்பர் 29,1688)
- தமிழ்நாட்டின் முதல் நகராட்சி - இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை(நவம்பர் 30,1866)
- கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறும் - 6(ஜனவரி 26- குடியரசு தினம், மே- 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்- 15 சுதந்திர தினம், அக்டோபர்- 2 காந்தியடிகள் பிறந்த தினம், மார்ச்- 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர்- 1 உள்ளாட்சி தினம்)
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் / வார்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு | உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை | மொத்த வார்டுகளின் எண்ணிக்கை | மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை | |
உறுப்பினர்கள் | மேயர்கள் / தலைவர்கள் | |||
மாநகராட்சி | 21 | 1,374 | 1,374 | 21 |
நகராட்சி | 138 | 3,843 | 3,843 | 138 |
பேரூராட்சி | 490 | 7,621 | 7,621 | 490 |
மொத்தம் | 649 | 12,838 | 12,838 | 649 |
ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்
ஊரக உள்ளாட்சி அமைப்பு | உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை | மொத்த வார்டுகளின் எண்ணிக்கை | மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை | |
வார்டு உறுப்பினர்கள் | தலைவர்கள் | |||
கிராம ஊராட்சி | 12,525 | 99,327 | 99,327 | 12,525 |
ஊராட்சி ஒன்றியம் | 388 | 6,471 | 6,471 | 388 |
மாவட்ட ஊராட்சி | 36 | 655 | 655 | 36 |
மொத்தம் | 12,949 | 1,06,453 | 1,06,453 | 12,949 |
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- இந்திய போட்டி ஆணையத்தின்(CCI) தலைவராக ரவ்னீத் கவுரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.
- இவர் ஐந்து ஆண்டுகள் வரை ஆணையத்தின் தலைவராக இருப்பார்.
- CCI தலைவருக்கு மாதந்தோறும் ரூ.4 லட்சத்து 50ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
இந்திய போட்டி ஆணையம் - முக்கிய தகவல்கள்
- இந்தியப் போட்டி ஆணையமானது போட்டிச் சட்டம், 2002-இன் கீழ் அமைக்கப்பட்ட நீதித் துறையைப் போன்ற (Quasi-judicial) சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- இது அக்டோபர் 14 ,2003 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது.
- பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
- தலைமையகம் - டெல்லி