போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 29-06-2023

 போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  29-06-2023


தேசியம் :-


Card image cap

  • தாய் பூமியின் மறுசீரமைப்புவிழிப்புணர்வுஉருவாக்கம்ஊட்டச்சத்து மற்றும் மேம்படுத்தலுக்கான,  ‘பிரதமர் பிரணாம்'(PM-PRANAM)  என்ற திட்டத்தைமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது அறிவித்தார்.
  • PM-PRANAM stands for PM Programme for Restoration, Awareness, Nourishment and Amelioration of Mother Earth.
  • தற்போது ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்துமாற்று உரங்களை ஊக்குவிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும், ‘பிரதமர் பிரணாம்’ திட்டத்துக்குமத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில்  ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • உதாரணத்துக்கு, 10 லட்சம் டன் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் இடத்தில்அதை 3 லட்சம் டன்னாக குறைக்கும்போதுமத்திய அரசுக்கு மானியங்களில் 3,000 கோடி ரூபாய் மிச்சமாகிறது. அவ்வாறு மிச்சமாகும் தொகையில், 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.
  • மேலும்ரசாயன உரங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் 2025 மார்ச் வரை அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொடர்கிறது. இதற்காக, 3.68 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதோடுபிரதமர் மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில்இயற்கை உரங்களுக்கான மானியங்களுக்கு 1,451 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாடு :-


Card image cap
  • பறவைகள் இனங்களை பாதுகாப்பதை மேலும் பலப்படுத்துவதற்காக தமிழக அரசு மாநில பறவை ஆணையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
  • இதன் தலைவராக சுற்றுச்சூழல்காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் செயல்படுவார்.

ஆணையத்தின் பணிகள்

  • அனைத்து பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கூடு கட்டுவதற்கு வசதியும்முன்னேற்றமும்பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வசிக்கும் இடங்களுக்கான வரைபடங்களை தயாரிக்க வேண்டும்.
  • பறவைகள் சரணாலயத்தை புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மறு ஆய்வு செய்தல்இந்த பணிகளுக்காக உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தி கொள்வது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும்.

தமிழகத்திலுள்ள பறவைகள் சரணாலயத்தின் பட்டியல்

  • தமிழகத்தில் 17 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் 14 ராம்சார் தளமாக இருக்கின்றன. அவை 

1.வேடந்தாங்கல் - காஞ்சிபுரம்

2. கரிக்கிலி - காஞ்சிபுரம்

3. வேட்டங்குடி - சிவகங்கை

4. கஞ்சிரன் குளம் - ராமநாதபுரம்

5. சித்திரன்குடி - ராமநாதபுரம்

6. உதயமார்தாண்டபுரம் - திருவாரூர்

7.வடுவூர் - திருவாரூர்

8. கூந்தன்குளம் - திருநெல்வேலி

9.கரைவெட்டி - அரியலூர்

10. வெள்ளோடு - ஈரோடு

11. மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர் - ராமநாதபுரம்

12. தீர்த்தங்கல் - ராமநாதபுரம்

13. சக்கரக்கோட்டை - ராமநாதபுரம்

14. ஊசுடு ஏரி - விழுப்புரம்

15. பழவேற்காடு ஏரி - திருவள்ளூர்

16.கழுவெளி சதுப்பு நிலம் - விழுப்புரம்

17. நஞ்சராயன் ஏரி - திருப்பூர்



Card image cap

  • நாட்டிலேயே முதல்முறையாகவேளாண்மை - உழவர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மண் வளம்’ எனும் இணைய முகப்பை (http://tnagriculture.in/mannvalam) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இந்த இணைய முகப்பில்விவசாயிகள் தங்கள் மாவட்டம்வட்டாரம்கிராமம்தங்களது நிலத்தின் புல எண்உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால்மண் வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டுஅவர்களது கைபேசியில் மண் வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.
  • விவசாயிகள் கணினிகைபேசி மூலமாக இந்த இணையதளத்தை அணுகலாம். நாட்டுக்கே முன்னோடியாக இந்த வசதி அமைந்துள்ளது.


Card image cap
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகைமேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
  • இதில்ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள்இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • இந்நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 3-ஆம்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இதில்சீன பானை ஓடுகள்காசு வார்ப்புஅலங்கரிக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இவை11-ஆம்நூற்றாண்டில் தமிழகத்துக்கும்சீனாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் இருப்பதாகவும்மேலும்இதுபோன்ற பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-


Card image cap

  • தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுகிறார்.
  • தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
  • சிவதாஸ் மீனா ஏற்கெனவே அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு நிர்வாக அதிகாரிதமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் மீனா1989-ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.


விளையாட்டு செய்திகள் :-



Card image cap
  • தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது.
  • இதன் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • கடைசியாக 2017-18 ஆம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.


முக்கிய நாட்கள் :-


Card image cap
  • புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசண்டா சந்திர மஹாலனோபிஸின் சீரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூன் 29- ஆம் தேதி ஆண்டுதோறும் புள்ளியியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • அன்றாட வாழ்வில்புள்ளியியல் பயன்பாட்டைப் பிரபலப்படுத்தவும்மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதில்புள்ளியியல் எப்படி உதவுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் புள்ளியியல் தினத்தை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் : நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான மாநிலம் மற்றும் தேசிய காரணி கட்டமைப்பை சீரமைத்தல்

முக்கிய குறிப்புகள்

  • இந்தியப் புள்ளியியலின் தந்தை -  மஹலனோபிஸ்
  • இந்திய புள்ளியியல் நிறுவனத்தை நிறுவியவர் - மஹலனோபிஸ்
  • இந்திய புள்ளியியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1931
  • புள்ளிவிவரணத் துறைக்காகவே 1933இல் ‘சங்கியா’ என்ற பெயரில் தனி இதழைக் கொண்டுவந்தவர் - மஹலானோபிஸ்.
  • 1950-இல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (NSS) அமைப்பு, 1951-இல் மத்திய புள்ளியியல் நிறுவன அமைப்பு ஆகியவற்றின் உருவாக்கத்தில் மஹலானோபிஸ் பெரும் பங்கு வகித்தார்
  • மஹலனோபிஸ் தலைமையிலான ‘இந்தியப் புள்ளியியல் நிறுவனம்’ இந்தியாவின் முதல் கணினியை 1955-லும்இரண்டாவது கணினியை 1959-லும் வாங்கியது.
  • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்(1956-1961) மகாலனோபிஸ் மாதிரியை அடிப்படையாக கொண்டது.
  • உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20


Card image cap
  • சர்வதேச வெப்ப மண்டல தினம் ஆண்டுதோறும் ஜூன் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நிகழ்வு வெப்ப மண்டலத்தின் முக்கியத்துவத்தையும்இந்தப் பிராந்தியங்களில் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது.
  • இத்தினம் 2014 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • வெப்பமண்டலப் பகுதி என் பது புவியில் உள்ள கடகரேகை(23° 27 வடக்கு) மற்றும் மகரரேகை(23° 27 தெற்கு) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி.

இராணுவம் :-



Card image cap
  • இந்திய விமானப்படைக்கு தேவையான இலகு ரக போர் விமானத்தை(LCA) ‘தேஜஸ் என்ற பெயரில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம்(HAL) தயாரிக்கிறது.
  • ஏற்கெனவே தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • தற்போது தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் அதி நவீன ஏவியானிக்ஸ் கருவிகள் மற்றும் அதிக ஆயுதங்கள் கொண்டு செல்ல முடியும்.
  • இதற்கு தேவையான இன்ஜினை அமெரிக்காவின் GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் HAL நிறுவனம் ஜூன் 22-ஆம் தேதி கையெழுத்திட்டது. இதற்கான அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கபயணத்தின்போது வெளியிடப்பட்டது.
  • இதற்கு முன்பு இந்திய போர் விமானங்களுக்கான இன்ஜின் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது.
  • தற்போது தேஜஸ் ரக போர் விமானத்துக்கு அமெரிக்க இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இன்னும் 18 மாதங்களில்(2025-இல்), தேஜஸ் மார்க் ரக முதல் விமானம் தயாராகிவிடும் எனவும்இது ரஃபேல் போர் விமானத்தை விட சிறந்ததாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.






Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post