இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 12-06-2023
தமிழ் நாடு :-

- தமிழகத்தில் ‘பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு’ கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்கும் பாய்மர படகு பயணத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- சென்னை துறைமுகம், பழவேற்காடு, கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தில் பெண் காவலர்கள் பயணிக்கின்றனர்.
- உலக அளவில் இதுபோன்ற படகு சாகச பயணங்களை ஆண்காவலர்கள் பலமுறை மேற்கொண்டுள்ளனர். முதன்முதலாக தமிழகத்தில்தான் பெண் காவலர்கள் 1,000 கி.மீ. தூர படகு சாகச பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
முக்கிய குறிப்புகள்
- தமிழக காவல் துறையில் பெண்கள் முதன்முறையாக பணியமர்த்தப்பட்ட ஆண்டு - 1973
- முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.
- தமிழகத்தில் தற்போது 202 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1992
- தமிழகத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை – 228 (இந்தியாவில் அதிக மகளிர் காவல் நிலையங்ள் கொண்ட மாநிலம்)
- தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி- திலகவதி(1976)
- தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி - லத்திகா சரண்(2010)
- தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட
- ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு -1989
பொருளாதாரம் :-

- சிங்கப்பூர் - 17.2 பில்லியன் டாலர் (ரூ.1.41 லட்சம் கோடி)
- மொரிஷியஸ் - 6.1 பில்லியன் டாலர் (ரூ.50,000 கோடி)
- அமெரிக்கா - 6 பில்லியன் டாலர் (ரூ.49,000 கோடி)
- ஐக்கிய அரபு அமீரகம் - 3.35 பில்லியன் டாலர் (ரூ.27,500 கோடி)
- நெதர்லாந்து - 2.498 பில்லியன் டாலர்(ரூ 20,594 கோடி)
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- 2020 முதல் தலைமை இயக்குநராக இருந்த டாக்டர் எஸ் ராஜுவுக்குப் ஓய்வுபெற்ற பிறகு ஜனார்தன் பிரசாத் புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
- 1851-இல் நிறுவப்பட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம், உலகின் பழமையான கணக்கெடுப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
- பல ஆண்டுகளாக, இந்திய புவியியல் ஆய்வு மையம், பல்வேறு புவிஅறிவியல் தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளர்ச்சியடைந்து, புவிஅறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
விளையாட்டுச் செய்திகள்:-

- பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்து, டென்னிஸ் சகாப்தத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.
- 34வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச் பெறும் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
- ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் படைத்தார்.
அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றவர்கள்
- நோவக் ஜோகோவிச் - 23
- ரஃபேல் நடால் - 22
- ரோஜர் பெடரர் - 20
முக்கிய நாட்கள்:-

- குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சர்வதேச பிரச்னைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
- உலகளாவிய தொழிலாளர் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை 2002-ஆம் ஆண்டில் நிறுவியது.
- உலகளாவிய தொழிலாளர் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பால்(ILO), குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் 2002-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் "அனைவருக்கும் சமூக நீதி, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!"
- உலகிலே இந்தியாவில் தன் அதிக குழந்தை தொழிலார்கள் உள்ளனர். 2011-இன் கணக்கெடுப்பின்படி, 10.1 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.
- 2021-22-ஆண்டில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2021-22-ஆண்டில் மொத்தம் 13,271 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகள் நலனுக்காக இந்திய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள்
- சட்டப்பிரிவு 21: வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்
- சட்டப்பிரிவு 21 A : 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி
- சட்டப்பிரிவு 23: ஆட்கடத்தல், பிச்சையெடுக்க வைத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
- சட்டப்பிரிவு 24: குழந்தைகளை தொழிற்சாலை அல்லது வேறு அபாயகரமான வேலையில் அமர்த்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
- சட்டப்பிரிவு 39(e): வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்
- சட்டப்பிரிவு 39(f):குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.
- சட்டப்பிரிவு 45: ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும்
- சட்டப்பிரிவு 51 A (K): 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குவது பெற்றோர்/காப்பாளரின் கடமை
இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள்
- கல்வி உரிமைச் சட்டம்,2009- 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு வழிவகைச் செய்கிறது.
- குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச்சட்டம், 1986)- இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.
- சிறார் நீதிச்சட்டம், 2000 (குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்) - இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களைச் சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.
- குழந்தை உரிமைகள் பாதுகாக்கும் ஆணையங்கள் சட்டம் 2005 (Commissions for Protection of Child Rights Act) - இச்சட்டம், மாநிலங்களுக்கு, மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களை (SCPCR) உருவாக்கிட மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விரைவாக நடத்த குழந்தைகளுக்கான நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரத்தை அளிக்கிறது.
- போக்சோ (POCSO) சட்டம், 2012 - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.
பிற தகவல்கள்
- 1098 குழந்தைகளுக்கான உதவி மைய எண்: இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
- PENCIL போர்ட்டல்- குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆன்லைன் புகார்களை தெரிவிப்பதற்கு.
- சர்வதேச குழந்தைகள் ஆண்டு என யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1979
Tags:
Current Affairs