இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 27-05-2023
தேசியம் :-

- தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கவுள்ளாா். இதைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 35 கிராம் எடையுள்ள அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தின் நடுவில், அசோகத் தூணில் சிங்கத் தலைகள் சின்னம் இடம்பெறும். இருபுறமும் ‘பாரத்’ என தேவநாகரி எழுத்து வடிவிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
- கீழே, ரூபாய் சின்னத்துடன் ‘75’ எண் இடம்பெற்றிருக்கும். மற்றொரு பக்கத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டட உருவம் பொறிக்கப்பட்டு, நடப்பாண்டை குறிக்கும் வகையில் ‘2023’ எண் இடம்பெறும்.
சர்வதேசம் :-

- 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:
- ஜிம்பாப்வே
- வெனிசுலா
- சிரியா
- லெபனான்
- சூடான்
- அர்ஜெண்டினா
- ஏமன்
- உக்ரைன்
- கியூபா
- துருக்கி
- வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- இப்பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில ஸ்விட்சர்லாந்து (157) உள்ளது.
தமிழகம் :-

- திட்டக் குழு உறுப்பினா்களில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா, தற்போது தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, அவரது இடத்தில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எழிலன் நாகநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- தமிழ்நாடு திட்டக் குழு நிறுவப்பட்ட ஆண்டு - மே 25,1971
- தலைவர் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
- துணைத் தலைவர் - ஜெ.ஜெயரஞ்சன்
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய குறிப்புக்கள்
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
- உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது: 62
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி- நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
- உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
- இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( 1 ஜூலை 1862)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
- சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
- இந்தியாவில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
- இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமளித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் - 7வது சட்டத்திருத்தம்,1956
- சென்னை உயர்நீதிமன்ற அதிகார வரம்பு எல்லை- தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவை யூனியன் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
- தனி நீதிமன்றம் கொண்ட ஒரே யூனியன் பிரதேசம் - டெல்லி(1966)
- மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட உயர் நீதிமன்றம் - குவஹாத்தி உயர் நீதிமன்றம்(அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கியது)
Tags:
Current Affairs