இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 31-05-2023
சர்வதேசம் :-

- சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு அனுப்பியது.
- லாங் மாா்ச்-2எஃப் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட அந்த விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்தது.
- கல்லூரி பேராசியரும், ஆய்வாளருமான குய் ஹாய்சாவ், விண்கல தலைவா் ஜிங் ஹைபெங், விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா்.
- இவா்களில் குய் ஹாய்சாவ்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள ராணுவத்தைச் சேராத முதல் சீனா் ஆவாா்.
- அத்துடன், விண்கலத் தலைவரான ஜிங் ஹைபெங் இதுவரை இல்லாத வகையில் 4-ஆவது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ள சீனா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.
- கடந்த 2003-ஆம் ஆண்டில் ஷென்ஷூ-5 விண்கலம் மூலம் விண்வெளி வீரா் ஒருவரை சீனா முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பியது.
- ரஷியா, அமெரிக்காவுக்குப் பிறகு சொந்த முயற்சியில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பிய 3-ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
தமிழ்நாடு :-

- விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சார்ந்த முத்தமிழ்செல்வி, மே 23 அன்று மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். இதன் மூலம் எவரெஸ்ட் பகுதியை ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த முதல் பெண் என்ற பெருமையை படைத்தார்.
- இவருடன் சென்னை கோவளம், மீனவ கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் பச்சை (வயது 28) அவர்களும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்திய அலைசறுக்கு வீரரான (surfing player) இவர் இளங்கலை கணினி (B.C.A) பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
முக்கிய குறிப்புகள்
- எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்த முதல் சாதனை பெண்- ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜூன்கோ தாபெய்(1975)
- எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய பெண் - பச்சேந்திரி பால்(1984)
- எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி - அருணிமா சின்ஹா(2013)
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8,849 m
பொருளாதாரம் :-

- ஏப்ரல் 2022 முதல் மாா்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் அனைத்து வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
- அந்த வங்கிகளில் மகாராஷ்டிர வங்கியின் வாராக் கடன் விகிதம் 0.25 சதவீதமாகும். இதுவே கடந்த ஆண்டின் குறைந்தபட்ச வாராக் கடன் விகிதமாகும்.
- 0.27 சதவீத வாராக் கடனுடன் ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளது. அந்த வங்கியின் வாராக் கடன் கடந்த நிதியாண்டில் 0.37 சதவீதமாக உள்ளது.
விளையாட்டு செய்திகள் :-

- கிரீஸ் நாட்டில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் 16. 78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன்.
- இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறன் என்பவரது மகன் தான் செல்வ பிரபு. இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
முக்கிய நாட்கள் :-

- ஆண்டுதோறும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை நுகர்வைக் குறைப்பதற்கான கொள்கைகளை உருவாக்கவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 7-இல் முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989-ஆம் ஆண்டு மே 31- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
- 1560-இல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் நிகாட் என்பவர் புகையிலையை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரிலிருந்தே நிகோடின் என்ற வார்த்தை உருவானது.
- சீனா 39.6 சதவீதமும், இந்தியா 8.3 சதவீதமும், பிரேசில் 7 சதவீதமும், ஐக்கிய அமெரிக்கா 4.6 சதவீதமும் புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன
- 'உணவை அதிகரியுங்கள், புகையிலையை அல்ல' என்பது இந்தாண்டின் மையக்கருத்து
Tags:
Current Affairs