போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 06-11-2023
🔘 தேசியம் :-

- பாரத் ஆட்டா என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (நவம்பர் 6) தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை (வேன்கள்) மையங்களைத் தொடக்கி வைத்தார்.
- இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் கீழ் இந்த நடமாடும் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- இதனை மானிய விலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50 காசுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

- தேசிய உணவு பாதுகாப்புசட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்தது.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தி அதனை தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்துடன் மத்திய அரசு இணைத்தது.
- இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
- அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.
- தற்போது இதனை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 81.35 கோடி மக்கள் பயனடைவர்.
முக்கிய குறிப்பு
- 2013 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) நிறைவேற்றப்பட்டது.
🔴 தமிழ் நாடு :-

- வேளாண்மை - கலித்தொகை 101, திருக்குறள் 81
- உழவர் - நற்றிணை 4
- பாம்பு- குறுந்தொகை-239
- வெள்ளம் - பதிற்றுப்பத்து-15
- முதலை- குறுந்தொகை-324
- கோடை- அகநானூறு-42
- உலகம்- தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56 திருமுருகாற்றுப்படை-1
- மருந்து- அகநானூறு-147, திருக்குறள் 952
- ஊர்- தொல்காப்பியம், அகத்திணையியல் -41
- அன்பு- தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84
- உயிர்- தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955
- மகிழ்ச்சி- தொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531
- மீன்- குறுந்தொகை 54
- புகழ்- தொல்காப்பியம், வேற்றுமையியல் 71
- அரசு- திருக்குறள் 554
- செய்- குறுந்தொகை 72
- செல்- தொல்காப்பியம், 75 புறத்திணையியல்
- பார்- பெரும்பாணாற்றுப்படை, 435
- ஒழி- தொல்காப்பியம், கிளவியாக்கம் 48
- முடி- தொல்காப்பியம், வினையியல் 206
🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற உதவும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று (நவம்பர் 6) பதவியேற்றுக் கொண்டார்.
- 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார்.
முக்கிய குறிப்புகள்
- தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரங்களில் உயர் அதிகாரம் கொண்ட தலைமை தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர், 10 ஆணையர் பதவிகள் உள்ளன.
- மத்திய தகவல் ஆணையம் பணியாளர் அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
- பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
- தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களின் பதவிக் காலம் - 3 ஆண்டுகள்
⚪ விளையாட்டு செய்திகள் :-

- பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் ஒற்றையா் போட்டி இறுதிச்சுற்றில் உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்,6-4, 6-3 என்ற நோ் செட்களில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.
- இது இவர் பெரும் 7-வது பாரீஸ் மாஸ்டா்ஸ் பட்டமாகும்
- குறிப்பு: நோவக் ஜோகோவிச் ஏற்கனவே அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்(24 முறை)
🟣 முக்கிய நாட்கள் :-

- 2015-ஆம் ஆண்டு டிசம்பரில், ஐக்கிய நாடுகளின் பொது சபை நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
- அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.
- இத்தினத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்:'Fighting Inequality for a Resilient Future'.
முக்கிய தகவல்கள்
- சுனாமி என்பது ஜப்பானிய மொழி சொல். தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது.
- கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போது சுனாமி உருவாகிறது.
- உலகில் 100 ஆண்டுகளில் 58 முறை சுனாமி ஏற்பட்டுள்ளது. இதில் 2.60 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
- 2004-இல் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்கிய சுனாமியில் 2.27 லட்சம் பேர் பலியாகினர்.
Tags:
Current Affairs