போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 31-10-2023

போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 31-10-2023



🔴 தமிழ் நாடு :-


Card image cap

  • மதுரை மாவட்டம்உசிலம்பட்டியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் புத்தூர் மலை உள்ளது.
  • பெருவணிகப் பாதையில் அமைந்துள்ள இம்மலை வணிகர்களுக்கு பழங்காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. மலையிலிருந்து கிழக்கு நோக்கி சென்றால் மதுரைக்கும்மேற்கு நோக்கி சென்றால் கேரளாவுக்கும் செல்லும் பாதையில் இம்மலை அமைந்துள்ளது.
  • இங்கு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்களை கலை வரலாற்று ஆய்வாளர் க.த.காந்திராஜன் தலைமையில் பணியாற்றிய குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
  • இதில் குதிரைகளில் பயணிக்கும் வீரர்கள்குதிரை வீரரை ஆயுதங்கள் மூலம் மற்றவர்கள் மிரட்டுவது போன்ற ஓவியங்கள்நடக்கும் மனிதர்கள்ஓடும் மனிதர்கள்வில்லை ஏந்திய வீரர்கள் (வில்லாளிகள்) மற்றும் சின்னச்சின்ன ஓவியங்கள் என 50-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் உள்ளன.
  • மேலும்முக்கியமாக மனித இனச்சேர்க்கையை விளக்கும் ஓவியங்களை நேர்த்தியாக வரைந்துள்ளனர்.
  • கீழடி அகழாய்வில் நகர நாகரிக வளர்ச்சி அடைந்த மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. அதேபோல்கீழடிக்கு முந்தைய கால கட்டங்களில் வாழ்ந்த மக்களின் ஆதாரங்களாக இந்த பாறை ஓவியங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Card image cap
  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று(அக்டோபர் 31) சென்னைபல்லாவரம் ரேடியல் சாலையில்சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Capitaland குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில்முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) திறந்து வைத்தார்.

முக்கிய தகவல்கள்

  • அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில்கிராமப்புறங்களை சார்ந்தபடித்த இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையிலான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கிஅவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • அதன்படிவிழுப்புரம்திருப்பூர்வேலூர்தூத்துக்குடிதஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாகமினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • தமிழகம் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற இலக்கு நிர்ணயத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

🟠 விருதுகள் :-


Card image cap

  • அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி 8-வது முறையாக பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார்.இதன்மூலம் அதிகமுறை இவ்விருதை வென்றவர் என்ற சாதனையையும் லயனல் மெஸ்ஸி படைத்துள்ளார்
  • பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருது மகளிர் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு

  • கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர்(Ballon d'Or)  விருதை FIFA ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கி வருகிறது.
  • இந்த விருது 1956-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

🟤 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

Card image cap

  • ஒடிசாவின் 26வது ஆளுநராக ரகுவர் தாஸ் இன்று(அக்டோபர் 31) பதவியேற்றுக் கொண்டார்.
  • ஒடிசா உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி, ரகுவர் தாஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தாஸ்ஒடிசாவின் புதிய ஆளுநராக கடந்த அக்டோபர் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.
  • இவர்2014 முதல் 2019 வரை ஜார்க்கண்டின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்புகள்ஆளுநரோடு தொடர்புடைய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள்

  • சட்டப்பிரிவு 153 -  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பாக ஒரே ஆளுநர் இருப்பதற்கு இவ்விதி எந்தவிதமான தடையும் கூறவில்லை.
  • சட்டப்பிரிவு 154 - மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறுகிறது. நிர்வாக அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படுத்தப்படலாம்
  • சட்டப்பிரிவு 155-  மாநில ஆளுநர் குடியரசுத்தலைரால் நியமிக்கப்படுகிறார்
  • சட்டப்பிரிவு 156-  ஆளுநரின் பதவிக்காலம்

ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியிலமர்த்தப்படுவார் அல்லது குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார் அல்லது வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும்வரை பதவியில் இருப்பார்.

  • சட்டப்பிரிவு 157 & 158- ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதிகள் மற்றும் அவரது பதவிக்கான வரைமுறைகள்
  1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. இலாபம் ஈட்டும் பதவி எதுவும் வகிக்கக் கூடாது.
  3. 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  4. நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது.
  • சட்டப்பிரிவு 159- ஆளுநரின் பதவிப்பிரமாணம்
  • சட்டப்பிரிவு 161- மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும்தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் உரித்தான அதிகாரத்தினைப் பெற்றிருக்கின்றார். எனினும்மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.(இந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு)


🟣 முக்கிய நாட்கள் :-


Card image cap

  • சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தின் கைரா மாவட்டத்தில் உள்ள நாடியாட் என்னும் ஊரில் 31.10.1875 அன்று பிறந்தார்.
  • 1897 ஆம் ஆண்டில் வல்லபாய் படேல் தனது 22-வது வயதில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.
  • வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர்தனது 25 வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார்.
  • பின்னர் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்
  • அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்காக போராடிஅவர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
  • 1917ஆம் ஆண்டு முதன்முறையாக மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட அவர்வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.
  • 1918-இல் குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டதால் ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்திபடேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் இறுதியில் வரி ரத்தானது.
  • 1928-இல் பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
  • 1931-இல் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1942- இல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்றதால் கைது செய்யப்பட்டார்
  • 1946-இல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சபையில் அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் ஆலோசனைக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
  • நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார்.
  • சிவில் சர்விஸ் பணிகளை (IAS,IPS,IFS) உருவாக்கியதில் படேலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
  • நவீன இந்தியாவை உருவாக்கியதில் பெருபங்காற்றிய இரும்பு மனிதர் படேல் தனது 75-ஆம் வயதில் 15.12.1950 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
  • 1991-இல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
  • 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால்படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி 'தேசிய ஒற்றுமை தினமாகக்' கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • 2018-ஆம் ஆண்டு இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தின் நர்மதா நதிக்கரையில்சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஒற்றுமைக்கான சிலை என அறியப்படும் இச்சிலை உலகிலேயே உயரமான சிலை ஆகும்






Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post